பாகிஸ்தானின் மிரட்டல்... அடுத்த போருக்கான அச்சாரம்?

சாணக்யா  avatar   
சாணக்யா
 
பாகிஸ்தானின் மிரட்டல்... அடுத்த போருக்கான அச்சாரம்?

சிந்து நதியை இந்தியா விடுவிக்கவில்லை என்றால், போரில் ஈடுபடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், "சிந்து நதி நீர் இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல" என்றும், "இந்தியா அதன் குறுக்கே அணை கட்டினால் 10 ஏவுகணைகளை கொண்டு அதை தகர்ப்போம்" என்றும் மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமின்றி, "பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது" என்றும், "பாகிஸ்தான் வீழ்ச்சியடைவதை உணர்ந்தால், உலகின் பாதி நாடுகளை வீழ்ச்சி அடைய செய்வோம்" என்றும் மிரட்டல் விடுத்தார். நட்பு நாடான அமெரிக்காவில் இருந்துகொண்டு 3-வது நாட்டை சேர்ந்த ஒருவர் உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்தது அதுவே முதல்முறை. இந்நிலையியல், இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படலாம் என்று, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bபிலாவல் Bபூட்டோ கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், "சிந்து நதி நீரை இந்தியா கொடுக்கவில்லை என்றால் இந்தியா மீது போர் தொடருவோம். அடுத்த போருக்கு பாகிஸ்தானியர்கள் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். 6 நதிகளை போரிட்டு பெறும் வலிமை பாகிஸ்தானிடம் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் போல் ஒரு தாக்குதலை இந்தியா நடத்த நினைத்தால், அதற்கு எதிராக போரில் இறங்குவதற்கு ஒவ்வொரு பாகிஸ்தானியரும் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரின் அணு ஆயுத மிரட்டலுக்கு மறுநாளே, இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் கூறியிருப்பது குருப்பிடத்தக்கது.

No comments found