மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 3 ஆண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது. 2023ம் ஆண்டு 200 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றதே இதற்கு தொடக்கமாக அமைந்தது. ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 16 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் உள்ள 50,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேலின் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு மாலத்தீவுக்கு வருவோருக்கு அனுமதி இல்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாலத்தீவு அதிபர் அலுவலகம், "குடிவரவுச் சட்டத்தின் 3-வது திருத்தத்திற்கு அதிபர் முகமது மூயிஸ் ஒப்புதல் அளித்துள்ளளார். இந்த புதிய திருத்தச் சட்டத்தின் மூலம், இஸ்ரேலிய பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் மாலத்தீவின் எல்லைக்குள் நுழைய முடியாது" என்று தெரிவிக்கபட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போரில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மாலத்தீவு, இந்த நடவடிக்கை எடுத்திருப்பது சர்வதேச அரசியலில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
No comments found